சிசேரியன் ஏன்?
எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.
எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.
சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.
சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.
தட்டம்மையை தடுப்போம்...
தடுப்பு முறை
இந்நோய் வரக்கூடிய நிலையில் உள்ள குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும். இந்தத் தடுப்பு ஊசியில் இந்த நோய்க்கு உரிய வீரியத்தைக் குறைத்து, அதே நேரத்தில் அதை நோய்வரும் முன்பு குழந்தைகளுக்குக் கொடுத்தால் உயிர் உள்ள தட்டம்மை வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போரிடுகின்ற சக்தியுள்ள எதிர்ப்பான்களை உண்டு பண்ணுவதைக் காணலாம். இந்தத் தடுப்பு ஊசி கொடுக்கப்பட்ட 5 முதல் 10 நாட்கள் வரை குழந்தையின் உடம்பில் சில நோய் உணர்வுகளை உண்டாக்குவது வழக்கம். பொதுவாக இந்தத் தடுப்பு ஊசியைப் போடவேண்டும். இத்துடன் சேர்த்து டி.பி. சம்மந்தப்பட்ட எம்.எம்.ஆர். தடுப்புமுறையோடு இந்தத் தடுப்பு போடுவது நல்லது. பெரும்பாலும் இந்தத் தடுப்பு ஊசியின் சக்தியினால் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் இந் நோய் வராமல் தடுக்கமுடிகிறது.
சிறு எச்சரிக்கை:
இந்தத் தட்டம்மை தடுப்பு ஊசியை சில நேரங்களில் கொடுக்கக்கூடாது. வெண் ரத்தக் கிருமிகளில் ஏற்படுகின்ற புற்று நோய் உள்ள குழந்தைகளுக்கும், அதே வெண் கிருமிகளில் ஒரு பகுதியான நிணநீர் சம்மந்தப்பட்ட வெள்ளை ரத்த அணுக்கள் குறைவான நேரங்களில் ஸ்டீராய்டு மற்றும் உணவு செரிப்புத்தன்மை சம்மந்தப்பட்ட மருந்துகளை உட்கொள்கின்ற நேரங்களிலும் மற்றும் டி.பி. வியாதியால் குழந்தை பீடிக்கப்பட்ட நேரங்களிலும் இந்தத் தடுப்பு ஊசியைப் போடாமல் தடுத்துவைப்பது நல்லது. ஆனால் சில குழந்தைகளின் உடம்பில் எய்ட்ஸ் சம்மந்தப்பட்ட எச்.ஐ.வி. தாக்கம் இருந்தாலும் இந்தத் தடுப்பு ஊசியைப் போடலாம்.
இணைந்து எதிர்க்கும் தடுப்பான்கள்:
எதிர்ப்பு ஆற்றல் குழந்தையின் உடம்பிலேயே உண்டாகாமல் அதற்குரிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கி எடுக்கப்பட்ட தடுப்பு ஊசிகளைக் கொடுத்து நோயை எதிர்த்து அமைதியாகப் போரிடும் முறையைப் பயன்படுத்தி இந்த நோய்வருகின்ற சூழ்நிலையில் இருக்கின்ற குழந்தைகளுக்கும், ஒரே வீட்டில் இருக்கின்ற குழந்தைகளுக்கும் கொடுப்பது முறையாகும். இவற்றோடு இணைத்து ‘காமா குளோபின்’ என்னும் ஊசியையும் 1/4 மில்லி லிட்டரிலிருந்து 1/2 மில்லி.லிட்டர் வரை குழந்தையின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் கணித்து கொடுக்கப்படுவது ஒரு முறையாகும். நிறைவான குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவது உண்டு. இந்த ‘காமா குளோபின்’ ஊசியை அதிக பட்சம் 15 மி.லி. அளவிற்குக் கொடுக்கலாம்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்