Myspace Backgrounds
MURUGAN - Maruthuvam
 

Home
Contact
Guestbook
Login
vote my page?
Mruthuvam
start
Photo gallery
Pudhiya Thentral
Maruthuvam
=> 1-ma
=> 2-ma
=> 3-ma
=> 4-ma
=> 5-ma
Tamilan
TamilNadu map
Title of your new page
Radio
Cursors
Tamil news papper
WallPapper
ulakam
12365

copy write www.murugan2.page.tl murugan

மாதவிடாய் நாள் தவறுவதேன்?


மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.

இதற்கான காரணங்கள்:

கருத்தரிப்பு: கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

சாதாரண நடைமுறை: மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

கவலை: மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஹார்மோன் சமச்சீரின்மை: இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்


நீரிழிவு நோய் பாலுணர்வை பாதிக்குமா?

பெண்களை ஓரளவு பாதிக்கும். ஆண்களுக்குத்தான் பாதிப்பின் அளவு அதிகரிக்கும். காரணம், உறுப்பு விரைப்பின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

நீரிழிவுள்ள பெண்கள் தாராளமாக கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கர்ப்பம் தரிக்கவேண்டும். குறிப்பாக இன்சுலினை உபயோகிக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். காரணம், அதிக அளவு இன்சுலின் கருவையும் பாதிக்கக்கூடும். நாட்பட்ட நீரிழிவுக்காக பொதுவாக மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்கள் வேண்டுமானால் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு உள்ள பெண்களுக்கு முதல் மாதவிலக்கு ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போகலாம். அடுத்தடுத்து ஏற்படும் மாத விலக்கு ஒழுங்கின்றி காணப்படும். பெரும்பாலும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குத்தான் பிரச்சினை. நீரிழிவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் எந்தத் தொல்லையும் வராது.

பொதுவாக ஆண்மை என்பதை பாலுறவு விஷயத்தில் ஆணுறுப்பு விரைப்பதைக் குறிக்கிறார்கள். ஆணுறுப்பில் மூன்று நீள்வட்ட சிலிண்டர் போன்ற வடிவில் மென்மையான திசுக்கள் உள்ளன. பாலுணர்வுத் தூண்டுதலின்போது இவைகளுக்குத் தமனிகள் மூலமாக அதிக இரத்தம் பாய்கிறது. இதனால் பஞ்சுத் திசுக்கள் பெரிதாக உப்பி பல மடங்கு பெரிதாகிறது. நாட்பட்ட நீரிழிவுக்காரர்களுக்கு இந்தத் தமனியில் அழற்சி ஏற்படுவதால் சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை, இதனால் அதன் எழுச்சியும் குறைகிறது. தொய்வு ஏற்படுகிறது.

நீரிழிவு நோயுள்ளவர்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பெரும்பாலான நீரிழிவு நோய்கள் சுமார் முப்பத்தைந்து முதல் நாற்பது வயது வாக்கில்தான் வருகின்றன. இது இவர்களின் திருமண வாழ்க்கையை அல்லது குழந்தைப் பேற்றை பாதிப்பதில்லை. இவர்களில் ஐம்பது விழுக்காட்டினர் ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயது வாக்கில்தான் பாலுறவுப் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

உறவு கொள்ள சிறந்த இடம்?

செக்ஸ் உறவு கொள்ள எது சிறந்த இடம்..? இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது ‘காமசூத்ரா காண்டம் நிறுவனம் சார்பில். முதலிடத்தை பெற்றது கார், அடுத்து பாத்ரூம், பப்ளிக் பார்க்.

காண்டம்ன்னா காமசூத்ராதான் என்று பலரும் தெரிந்திருக்கும். அது அவ்வப்போது காண்டம் விழிப்புணர்வுகாக பிரசாரம் செய்வதும், இது போன்று சர்வே எடுப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் நடந்த இந்த சர்வேயில் பங்கேற்றது 17 ஆயிரத்து 45 பேர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல, காண்டம் பயன்படுத்துவோரில் சர்வேயில் பங்கேற்றவர்கள் என்று பார்க்கும் போது, சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

செக்ஸ் உறவு கொள்ள ஏற்ற இடம் என்றால், அது அவரவர் படுக்கை அறைதான். ஆனால் சிலருக்கு அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பிடித்த இடம் என்பது முதலில் கார் தானாம். அடுத்து பாத்ரூம் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பேர், பூங்கா, தோட்டம் என்று கூறியுள்ளனர்.

சர்க்சைக்கிடமான விஷயம் பற்றியும் இந்த சர்வேயில் மீண்டும் கேட்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்டதற்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இதில் வேதனை தரத்தக்கது என்னவென்றால், இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் தான். இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. பெரும்பாலோர், நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர். இது 73 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து ஓரினச்சேர்கையும் சமுதாயத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பதும் சர்வேயில் தெரியவந்தது.

இந்த சர்வேயில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதுதான். கருத்தடை சாதனம் பயன்படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிகிறது. பல டீன் ஏஜ் வயதினர் வாய் வழிப்புணர்ச்சி கொள்வதில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று சொல்கின்றனர். ஆனால் அது நல்லது தானா என்று கேட்டால், அது தானே பாதுகாப்பானது என்கின்றனர். இதுவும் வேதனையான விஷயம். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு, இளைஞர்களிடம் குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. வெறும் ஆறு சதவீதப் பேருக்குதான் வாய் வழிப்புணர்ச்சி மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்று தெரிகிறது.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த கவர்ச்சி உடல் பகுதி எது என்றால், மார்பகங்கள், ஒட்டுமொத்த தோற்றம், பெண்களின் பின்பகுதியில் உள்ள பிட்டம், அது போல பெண்களுக்கு ஆண்களின் உடல்பகுதியில் கவரத்தக்கது என்றால் ஒட்டுமொத்த தோற்றம், கண்கள், புடைதெழும் உடல் அழகு ஆகியவை தானாம். இதுவும் சர்வேயில் கிடைத்த ருசிகரமான தகவல்கள்.
 





Free Cursors





More Cool Stuff At POQbum.com







   





This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free