Myspace Backgrounds
MURUGAN - 3-ma
 

Home
Contact
Guestbook
Login
vote my page?
Mruthuvam
start
Photo gallery
Pudhiya Thentral
Maruthuvam
=> 1-ma
=> 2-ma
=> 3-ma
=> 4-ma
=> 5-ma
Tamilan
TamilNadu map
Title of your new page
Radio
Cursors
Tamil news papper
WallPapper
ulakam
12365

copy write www.murugan2.page.tl murugan

எய்ட்சுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு...

 

மனித உடலின் செல்லில் ஒரு இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை எச்.ஐ.வி. கிருமி ஆக்கிரமித்துக் கொண்டு நுழைந்த வேகத்திலே ஒன்றுபலவாக பலநூறாக பல்கிப் பெருகி அந்த செல்லை அழிக்கிறது. பிறகு இன்னொரு செல்லுக்குத் தாவுகின்றது. இவ்வாறு பல செல்கள் அழிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போது தயாராகக் காத்திருக்கும் ஏராளமான தொற்று நோய்களில் ஒன்று உடனே வந்து ஒட்டிக்கொள்கின்றது.

மனித உடலில் செல்லில் உள்ள இடைவெளியில் எச்.ஐ.வி. கிருமி நுழைவதைத் தடுக்க இடைவெளியை நிரப்பக் கூடிய ஒரு அணு திறன் கூட்டுப் பொருளை உருவாக்கி யுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக எச்.ஐ.வி கிருமியை ஒழிக்கும் ஒரு மருந்து தயாரிக்கப்பட்டு மருத்துவமனைப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படலாம். ஆனால் இதன் முடிவு வெளியாக சிறிது காலம் ஆகலாம்.

மனித உடம்பின் செல்லில் உள்ள இடைவெளிக்குள் செலுத்தப்படும் அணுத்திரள் கூட்டுப்பொருள் எச்.ஐ.வி. கிருமி நுழையாத படிக்கு நீண்ட காலத்திற்கு அங்கேயே இருக்குமென்பதை அறிவியல் அறிஞர்கள் நிரூபிக்க வேண்டும். உலகில் தினமும் 16 ஆயிரம் புதிய எச்.ஐ.வி.கேஸ்கள் வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் 5பேர் எச்.ஐ.வி. கிருமிக்கு இரையாகி மடிகின்றனர். இது போன்ற ஆய்வு முடிவுகள் இந்த நோய்க்கு எதிரான நம்பிக்கையை தருகின்றன.

விதை மேவிக் குழாய் அழற்சி!


ஆணின் பிறப்புறுப்பில் விதைப்பை முக்கிய பங்கு வகிக்கின்றது. விதைப்பையில், விதை இருக்கிறது. இது விந்து உயிர் அணுக்களையும் ஆண்மைக் குண இயக்குநீரையும் சுரக்கின்றது.

இந்த விந்தணுக்கள் விதை மேவிக் குழாய், விந்தணு குழாய் மூலம் விந்து நீர்ப்பையில் கொட்டப்படுகின்றது. விலை மாதர் உடல் உறவால் பால்வினை நோய்கள் பிறப்புறுபைத் தாக்கும் போது, விதை மேவிக் குழாயும் தாக்கப்படும். இதற்கு எப்பிடிடிமைட்டிஸ் என்று பெயர். இதனால் விதைப்பை, வலி கொடுக்கும். கனமாக பெரிதாக வீங்கி இருக்கும். சிறுநீர் கடுக்கும். அத்துடன் பலவித தொல்லைகளையும் கொண்டுவரும்.

உடல் உறவு மூலம் வரும் விதை மேவிக் குழாய் அழற்சி...

1. கோனோரியா என்ற வெட்டை நோய்: இந்த நோய் வெட்டைநோய் வரக்காரணம், கோனோரியே என்ற விஷக்கிருமியாகும்.

இது விலைமாதர் உடல் உறவால் சிறுநீர்த்தாரை வழியே உள்ளே புகுந்து சிறுநீர்ப்பை, விந்து குமிழ்ப் பை, புரோஸ்டேட் சுரப்பி, விதையகம் முதலியவற்றைத் தாக்கி தொல்லை கொடுக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது நீர்த்தாரை எரியும் கடுக்கும். சிறுநீர் ‘மோர்’ மாதிரி தயிர் மாதிரி வடியும். விரை மேவிக்குழாய்க்கு கோனோரியா கிருமிகள் பரவினால் அவையும் அழற்சியாகி, வீக்கம் கண்டு, வலி கொடுக்கும். முறையான வைத்தியம் பார்த்து குணம் ஆக்காவிட்டால் விதையகம், விதைமேவிக் குழாய் முதலியன பாதிக்கப்பட்டு, ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

2. கிளாமீடியா என்ற “நீர்க்கடுப்பு” வியாதி: இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு கிளாமிடியா டிராக்கோமேட்டீஸ் என்று பெயர். இதுவும் விலைமாதர் உடல் உறவாலும் வரும். விதை மேவிக் குழாயையும் தாக்கி அழற்சி ஏற்படுத்தும்.

3. டிரைக்கோமோனேசிஸ் போன்ற வெள்ளை படுதல் நோய்: இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு பெயர் டிரைக்கோமோனாஸ் வெஜினாலிஸ் இது பெண் பிறப்பில் தொற்றி வெள்ளைத் திரவத்தை வடியவிடும். சிறுநீர்க்கடுப்பையும் கொடுக்கும். ஆண்களுக்கு இந்த நோய் உடல் உறவின் போது பரவினால் அவனுக்கும் விதையகம் விதைமேவிக் குழாய் பாதிக்கப்பட்டு வேதனை கொடுக்கும்.

4. இ.கோலை என்ற நீர்க்கடுப்புக்கிருமி மூலம் வரும் தேன் நிலவுக் காய்ச்சல்.

இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு எஸ்செரீரியா கோலை என்று பெயர். இதுவும் அடிக்கடி உடல் உறவு கொள்வதன் மூலம் மலக்குடலில் உள்ள இக்கிருமி, பிறப்புறுப்பில் தொற்றி சிறு நீர்க்கடுப்பை உண்டாக்கும் விதைமேவிக் குழாயும் பாதிக்கப்பட்டு வலி கொடுக்கும்.

உடல் உறவு மூலம் வராத தொற்று நோய்கள் மூலம் வரும் விதைமேவி அழற்சிகள்...

உடல் உறவு மூலம் அல்லாமல் உடல் வியாதிகள் மூலமாகவும் விதைமேவிக் குழாய் அழற்சி வரலாம்.

அவைகள்: மண், தண்ணீர் மூலம் பரவும் வியாதிக் கிருமிகள்...

1. சூடோமோனாஸ் ஏருஜீனோசா கிருமி, இக்கிருமிகள் காயங்கள், தண்ணீர், மண் மூலம் உடலுக்குள் சென்று விதைப்பை, விதைமேவிக் குழாய், சிறுநீர்ப்பை போன்ற இடங்களை பாதிப்பு அடையச் செய்யும் விதைமேவிக் குழாய் அழற்சியாகி வலி கொடுக்கும்.

2. நைசீரியா மெனின் ஜைடிஸ் என்ற மூளைக் காய்ச்சலைக் கொடுக்கும் கிருமியும் சில சமயங்களில் விதையகம், சிறுநீர்ப்பை, விதைமேவிக் குழாயைத் தாக்கி தொல்லை கொடுக்கும்.

3. புருசெல்லா போலின் கிருமி: இது நுரையீரலைத் தாக்கி குளிர் காய்ச்சல், சளி போன்றவற்றை கொடுக்கும் கிருமி என்றாலும் பிறப்புறுப்புக்களையும் தாக்கி, விரைமேவிக் குழாய் விதையகம் சிறுநீர்ப்பை, போன்ற இடங்களில் அழற்சி ஏற்படுத்தும்.

4. ஹீமோ பிளஸ் இன்புளுயன்சா கிருமி: இது நுரையீரலைத் தாக்கி குளிர் காய்ச்சல், சளி போன்றவற்றை கொடுக்கும் கிருமி என்றாலும் பிறப்புறுக்களையும் தொற்றி விதைமேவிக் குழாய் அழற்சியை ஏற்படுத்தும்.

5. சிஸ்டோசோமா ஹீமடோபயம் கிருமி...

இது மலக்குடலில் தொற்றி வாழும் கிருமி, பிறப்புறுப்பையும் தாக்கி தொல்லை கொடுக்கும்.

நீண்ட நாட்களாக தொல்லை கொடுக்கும் விதைமேவிக் குழாய் அழற்சி...

எந்த வியாதியும் மூன்று மாதத்திற்கு மேல் ஒரு உடம்பில் இருந்தால் அதற்கு கிரானிக் வியாதி என்று அழைப்பர். அப்படி நீண்ட நாட்கள் விதைமேவிக் குழாயில் பரவி இருந்து தொல்லை கொடுக்கும் வியாதிகள்...

1. கிளாமிடியா நீர்க்கடுப்பு கிருமியால் வரும் வியாதி.

2. மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசிஸ் என்ற காசநோய் வியாதி.

3. மருந்துகள், மாத்திரைகள் மூலம் வரும் விதைமேவி குழாய் அழற்சி நோய்.

உதாரணம்: அமியோடோரோன்

இருதய நோய்க்கு இருதய துடிப்பை சீர் செய்ய நீண்ட நாட்கள் கொடுக்கும் இந்த மருந்துகள், சிறுநீர்ப்பை, விதையகம், விதை மேவிக் குழாய் போன்ற இடங்களில் அழற்சி ஏற்படுத்தி தொல்லை கொடுக்கும். இப்படி பலவகை வியாதிகள் மூலம் விதைமேவிக் குழாய் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலை அறித்தோம். இதனால் நோயாளிகளுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படும்.

1. விந்தணுக்கள் விந்து நீரில் குறைவு.

2. ஆண்மை குண நீர் (ஆஸ்ட்ரோஜன்) ரத்தத்தில் குறையும் தன்மை.

3. மலட்டுத்தன்மை.

4. விரைமேவிக் குழாய், விதையகம், முதலியவற்றில் ‘சீழ்’ கட்டிகள் தோன்றுதல்.

5. இல்வாழ்க்கை (உடல் உறவு வாழ்க்கை) பாதிப்பு என பல ஏற்படும்.

சிறந்த பாலியல் வைத்தியரை உடன் நாடி தகுந்த வைத்தியம் பார்த்து குணம் பெற வேண்டும். காரணம், பிறப்புறுப்புகள் இல்லறத்துக்கு உடல் இன்பத்துக்கு மிக அவசியம் அன்றோ..!

லிங்கவளைவை நேராக்குவோம்

 

லிங்கத்தின் வளைவும் சிகிச்சையின் விளைவும்

பொதுவாக எந்த ஒரு வியாதிக்கும் காரணம் ஒன்றாக இல்லாமல் பலவிதக் காரணங்கள் அடிப்படையாக்கிக் காட்டினாலும் அதே போன்று ஒரு குறிப்பிட்ட அறுதியான மற்றும் இறுதியான சிகிச்சை முறை காட்டப்படாமல் பலதரப்பட்ட முறைகளைக் காண்பித்தால் அந்த வியாதிக்கு இன்னும் சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் அதேபோன்று சரியான முறையான சிகிச்சைமுறையும் இது வரை அமையவில்லை என்பதே உண்மையாகும். இதைப்போன்ற வியாதிகளில் ஒன்றுதான் லிங்கத்தின் வளைவான ‘பைரோனிஸ்’ எனப்படும் இந்த ஆண் பாலுறுப்பைத் தாக்குகின்ற ஒரு வித்தியாசமான வியாதி என்பதை நாம் தெரிந்துகொள்வது நல்லது. இருப்பினும் இந்த வியாதியின் சிகிச்சை முறை எவை எவை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நோய் ஆய்வு முறை: அடிப்படை பரிசோதனைகளோடு பாலியல் சம்மந்தப்பட்ட வியாதிகளின் பரிசோதனைகளையும் செய்து பார்ப்பது நல்லது. இப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒன்றாக வாசர்மேன் பரிசோதனை ஒன்றாகும். நுண்கதிர் அடிப்படையில் படத்தில் விழுகின்ற தன்மையுடைய சாயத்தை உட்செலுத்தி தாக்கப்பட்டுள்ள சதைப்பகுதியான கார்ப்போரா கேவர்னோசா என்று சொல்லப்படும் விங்கத்தின் சதியிலே நுண்கதிர் படம் எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியின் நீள அகலத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. சில நேரங்களில் வேறு ஏதாகிலும் உறுப்பில் தோன்றியுள்ள புற்றுநோய் இடம் தாண்டி பரவி லிங்கத்தில் இந்த விளைவை ஏற்படுத்தியுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

சிகிச்சை முறைகள்:

அறுவை சிகிச்சை: பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டி எடுத்துவிட்டு அந்தக் குறையுள்ள பகுதியை உடலில் உள்ள கொழுப்பு அல்லது தோல் முதலியவற்றை இணைத்து சரிசெய்வது ஒரு முறையாகும்.

வைட்டமின் ‘இ’: பொதுவாக வைட்டமின் ‘இ’: பொதுவாக வைட்டமின் ‘இ’ பாலியல் சம்மந்தப்பட்ட சிரமங்களுக்குக் கொடுக்கப்படும் ஒன்றாகும். இது சில சமயங்களில் ஆண் பெண் இருபாலர் இருவருக்குமே சிகிச்சைமுறையில் கொடுக்கப்படுவது உண்டு. அந்த அடிப்படையில் இந்த வியாதிக்கும் இந்த வைட்டமின் ‘இ’ உபயோகமாக உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு இது பயன்படுகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

செயற்கைக் காய்ச்சலும் நோயின் தன்மையும்: சூடோமோனாஸ் ஏரோஜினாசா என்று சொல்லப்படும் நுண்கிருமியிலிருந்து காய்ச்சலை உண்டாக்கும் வடிகட்டியைக்கொண்டு உருவாக்கப்படும் காய்ச்சல் இந்த வியாதி குணமடைவதாக ‘பைட்டல்’ என்பவர் 1966ல் கூறியுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட ஆபத்தான முறைகளை யாரும் கையாள்வதில்லை.

பொட்டாசியம் பேரா அமனோ பென்ஜியேட்: இந்த மருந்தின் மூலம் 1959ல் 21 பேர் பயன் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 14 பேருக்கு இதன் அளவு குறைந்தும் இருவருக்கும் இந்த வளைவு மறைந்தும் போனதாகக் கூறப்படுகிறது.

பெண் பாலியல் இயக்கு நீர் சிகிச்சைமுறை: பொதுவாக இது ஒரு எதிர்ப்பான விளைவுகளின் அடிப்படையில் உதவும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஸ்டீராய்டு: இந்த இயக்கு நீர் மருந்தும் நேரிடையாகப் பாதிக்கப்பட்ட லிங்கத்தின் வளைவில் செலுத்தபடும். ஆனால் இந்த வளைந்த பகுதி மிகவும் செலுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதோடு நோயாளிக்கு வலியும் அதிகமாகக் காணப்படும். இந்த முறையிலும் அதிக அளவில் வெற்றி பெற்றதாகக் கூறமுடியாது.

நுண்கதிர் சிகிச்சைமுறை: நுண்கதிர் இணைந்துள்ள ஊசிகளை உட்செலுத்தி அதன் மூலமாக இந்த வளைவின் கடுமையைக் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்படி உட்செலுத்தப்படும் நுண்கதிர்கள் உள்ளே இருக்கின்ற வளைவை நேராக்குகின்ற அதே நேரத்தில் மேலே இருக்கும் தோலில் புண்களை உண்டாக்கி விடுகின்றன. சில நேரங்களில் இந்த நுண்கதிர் ஊசிகளோடு ஸ்டீராய்டு ஊசிகளையும் கலந்துபோடுவது உண்டு.

நுண் ஒலி அதிர் வலை சிகிச்சை முறை: அல்ட்ரா வைப்ரேஷன் என்று சொல்லப்படும் இந்த நுண் ஒலி அதிர்ச்சி அலையை உட்செலுத்தி வளைவை உண்டாக்கியுள்ள கடுமையான சதைகளை பொடியாக்கி அதை மறைய வைப்பது உண்டு. இதில் ஓரளவு வெற்றி கிடைத்தது. வலி குறைந்தது.

இதேபோன்ற முறையில் பல மருந்துகளைப் பயன்படுத்தி மேலே தடவி அழுத்தமாக உருவிவிடும் நிலையில் செய்யப்பட்ட ஐயோன்டிராபோரஸ் எனப்படும் முறையும் ஒன்றாகும்.

டைமித்தல் சல்பாக்சைடு என்னும் மருந்தும் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது.

அயோடின் கலந்த தடவும் மருந்துகளை வைத்து ஓரளவிற்கு நோயாளிகள் மன திருப்தி அடையும் நிலையை உண்டாக்கினார்கள்.

புற்றுநோய் மருந்தின் செயல்பாடுகள்: புரோகார்பசின் என்று சொல்லப்படும், நடுலன் என்னும் மருந்தும் பயன்படுத்தப்பட்டன.

இது புற்றுநோயின் அடிப்படையில் உள்ள சில வியாதிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்றாகும். குறிப்பாக ஆக்சின் லிம்ப்போமா என்று சொல்லப்படும் நிண நீர் சுரப்பியைத் தாக்கும் ஒரு விதமான புற்றுநோய் போன்ற வியாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு ஓரளவிற்கு லிங்கத்தின் வளைவில் வெற்றி பெற முடிந்தது. இருந்தாலும் இந்த மருந்து இறுதியில் ஆண்களின் விதைப் பைகளில் உள்ள விந்தகங்கள் பாதிக்கப்பட்டு விந்தணுக்கள் உற்பத்தியாகாமல் போய் அவர்களை பேடித்தனதிற்குக் கொண்டுசெல்வதால் இந்த சிகிச்சை முறையும் தோல்வியுற்றது. ஆகையால் இந்த வியாதிக்கு சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்பாக நோயுற்றவரிடம் இதில் உள்ள குறை நிறைகளை விளக்கிச் சொல்லி அவரை உணரவைத்து அதன் பிறகு சிந்தனையோடு கூடிய மருத்துவ முறைகளைக் கையாள்வது மருத்துவ நிபுணர்களின் கடமையாகும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

 

 





Free Cursors





More Cool Stuff At POQbum.com







   





This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free